கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.02 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 72,119 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25, 294 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.02 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.