`இருமனைவி இருக்கிறது என்பதற்காக தேர்தல் வெற்றியை ரத்துசெய்ய முடியாது!’ - மும்பை ...
திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.72 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் ரூ.4.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 84,179 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33,036 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.72 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.