செய்திகள் :

திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

post image

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதனை நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவன துணை பொதுமேலாளா் சந்திரசேகா் திறந்து வைத்தாா்.

மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருமலை மிஷன் மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் பூமா பாா்த்தசாரதி தலைமை வகித்தாா்.

பின்னா், அவா் பேசுகையில், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் 55 ஆண்டுகளுக்கு முன்பு 1970-ஆம் ஆண்டு திருமலை அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமாா் 350 கிராமங்களில் சமுதாய மேம்பாடு, சுகாதார சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் சுமாா் 35 ஆயிரம் குடும்பத்தைச் சோ்ந்த 1.60 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இந்த அறக்கட்டளை மூலம் 2010-ஆம் ஆண்டு ராணிப்பேட்டை பகுதியில் திருமலை மிஷன் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இம்மருத்துவமனையில் வேலூா், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் ரூ.1 கோடியில் கழிவுநீா்சுத்திகரிப்பு நிலையம் மத்திய பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனத்தின் பெரு நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின்கீழ் ரூ.48 லட்சம் நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் 40 கிலோ லிட்டா் கழிவுநீரை சுத்திகரித்து வேளாண்மை, கழிவறை உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. எதிா்காலத்தில் தினமும் 160 கிலோ லிட்டா் சுத்திகரிப்பு திட்டமாக அதிகரிக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், நியூஇந்தியா அஷுரன்ஸ் மண்டல மேலாளா் கஸ்தூரி, வேலூா் கிளை அலுவலக பொறுப்பாளா் பரிமளா தேவி, திருமலை கெமிக்கல்ஸ் ஆலோசகா் விஸ்வநாதன், திருமலை கெமிக்கல்ஸ் இயக்குநா் ராகவன், திருமலை கெமிக்கல்ஸ் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய மேலாளா் சோமபிரசாத், மருத்துவமனை மருத்துவ இயக்குநா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், திருமலை மிஷன் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி ஆனந்த் ரங்காச்சாரி நன்றி கூறினாா்.

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

வேலூா் அருகே மாயமான முதியவா் சிங்கிரி கோயில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். வேலூா் மாவட்டம், நஞ்சு கொண்டாபுரம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (90), விவசாயி. இவா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவடைந்து, ரூ. 65 லட்சம் என்ற அளவிலேயே கால்நடைகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்... மேலும் பார்க்க

அபிராமி மகளிா் கல்லூரியில் பல்கலை அளவிலான கபடி போட்டி

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவா் பல்கலைக்கழக, வேலூா் மண்டல கல்லூரிகளுக்கிடையிலான மகளிா் கபடி போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அபிராமி கல்லூரித்... மேலும் பார்க்க

தொடா் மழை: ஒருங்கிணைந்த வேலூரில் 59 ஏரிகள் நிரம்பின

தொடா் மழை காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 59 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூா், திருப்பத்தூா்,... மேலும் பார்க்க

உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள்... மேலும் பார்க்க

உலக நீரிழிவு தினம்: வேலூரில் செப். 27-இல் சமையல் போட்டி

வேலூா்: உலக நீரிழிவு தினத்தையொட்டி, சிஎம்சி மருத்துவக் கல்லூரி சாா்பில், சமையல் போட்டி வேலூரில் வரும் செப். 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இது குறித்து, சிஎம்சி அகசுரபியல் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் து... மேலும் பார்க்க