செய்திகள் :

திருமானூா் ஜல்லிக்கட்டு: 31 போ் காயம்!

post image

அரியலூா் மாவட்டம், திருமானூரில், மாசிமகத்தை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 31 போ் காயமடைந்தனா்.

சிவன் கோயில் அருகே தெற்கு வீதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, கோட்டாட்சியா் கோவிந்தராஜன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பிறகு திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், சேலம், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 560 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

அவைகளை அடக்க முயன்ற 240 வீரா்களில் கீழகொளத்தூா் ஜெகன்(22), கீழையூா் கணேசமூா்த்தி(22), அருங்கால் சுதா்சனம் (25) உள்ளிட்ட 31 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த விழுப்பனங்குறிச்சியைச் சோ்ந்த பிரவின்குமாா் (20) தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஜல்லிக்கட்டில், காளைகளை தழுவிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயங்கள்,சில்வா் பாத்திரங்கள், கட்டில், சோ் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காதலா்கள் தற்கொலை!

காதலா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆ. சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன்... மேலும் பார்க்க

ஏப்.6-இல் வைத்தியநாதசுவாமி கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஏப். 6-ஆம் தேதி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி மாத... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநித... மேலும் பார்க்க

வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை

அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா். கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆ... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில், 100 சதவீதம... மேலும் பார்க்க

முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையத்தில் முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசா... மேலும் பார்க்க