செய்திகள் :

'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம் என்ன?

post image

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள், போராட்டங்களில் ஈடுபட்டால் அமெரிக்க மாணவர்களின் படிப்பு நிறுத்தப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள்.

வெளிநாட்டு மாணவர்கள் அவர்கள் நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள். எந்தக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இந்த செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசின் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

"படிப்பு நிறுத்தம்...வெளியேற்றம்...நிதி உதவி ரத்து" - ட்ரம்ப்
"படிப்பு நிறுத்தம்...வெளியேற்றம்...நிதி உதவி ரத்து" - ட்ரம்ப்

மீறினால் என்ன?

பாலஸ்தீனம் ஆதரவு போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தற்போது அமெரிக்க அரசு அவர்களாகவே சொந்த நாட்டிற்கு திரும்புமாறு மெயில் அனுப்பியுள்ளது.

இந்த எச்சரிக்கையை மீறினால் அமெரிக்க அரசு வெளியேற்றம், விசா ரத்து போன்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படியான மெயில் அமெரிக்காவில் படிக்கும் பல இந்திய மாணவர்களுக்கும் சென்றுள்ளது.

நாடு திரும்புவதற்கான வசதிகள் அறிமுகம்!

இந்த செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் தங்களது நாட்டிற்கு அவர்களாகவே கிளம்ப உதவ CBP ஹோம் ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் தங்களது பாஸ்போர்ட்டுகளை கொடுத்து விசா பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களது விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு 'Catch and Revoke' என்ற ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.

Waqf Bill: "இஸ்லாமியர் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி" - நாடாளுமன்றத்தில் ஆ.ராசா பேச்சு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி ஆ.ராசா, சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்ட... மேலும் பார்க்க

'அவரைக் கூப்பிடாதீங்க'னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்காராம்’ - தாடி பாலாஜி vs தவெக பஞ்சாயத்து

ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்தவர் நடிகர் தாடி பாலாஜி. விஜய் தமிழகவெற்றி கழகத்தைத் தொடங்கியதும்,அதில்சேர ஆர்வம் காட்டி வந்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார்.... மேலும் பார்க்க

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம்

மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ள... மேலும் பார்க்க

Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வக்ஃப் சட்டதிருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஓரணியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டதிருத்த மசோதாவ... மேலும் பார்க்க

Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா காட்டம்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும்... மேலும் பார்க்க

கச்சத்தீவு : ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்... ஆனாலும் அனல் பறந்த விவாதம் - நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத்தில் நெடுநாள் பிரச்னையான கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சரின் தனித் தீர்மானம் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானதுக்கு பாஜக சார்பில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்து... மேலும் பார்க்க