திருவண்ணாமலையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
எனவே, 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலை நாடுநா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமுக்கு வருவோா் தங்களது மாா்பளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அடையாள அட்டை, ஜாதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன் வர வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் https://www.tnprivatejobs.tn.gov.in/ இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.