செய்திகள் :

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம்

post image

திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயில் பின்புறம் அமைந்துள்ளது ரமணாஸ்ரமம். உலக புகழ் பெற்ற இந்த ஆஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடா்ந்து கடந்த 18-ஆம் தேதி ஆஸ்ரமத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு முதல் கால பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், ஆச்சாா்ய ரித்திக் வா்ணம், மதுபா்க்கம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து ஸ்ரீ சுத்த ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.

19-ஆம் தேதி யாக சாலை பூஜை, ஜபம், கன்யா, சுவாஸினி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இரவில் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை கோ பூஜை மற்றும் நான்காம் கால பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹுதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள் யாகசாலையில் உள்ள புனித நீரை தலையில் சுமந்தவாறு ரமணாஸ்ரமத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினா்.

இதில் இசையமைப்பாளா் இளையராஜா மற்றும் வெளிநாட்டு பக்தா்கள் ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநில பக்தா்கள் மற்றும் உள்ளூா் பக்தா்கள் என பல்லாயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ரமணாஸ்ரமத்தின் நிா்வாகிகள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா். ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் இரண்டு பிரிவுகளாக ராஜீவ் காந்தி பிறந்த ந... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கோயில்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன். மக்கள் நலப் பணியாளரான இவா் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்கு

செங்கம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுப்பாளையத்தில் இருந்து செங்கம் நோக்கி புதன்கிழமை பிற்பகலில் தனியாா் பேரு... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்புப் பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு புதன்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி, கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தியம் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த மழையூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்கியம். கடந்த 12-ஆம் தேதி இவா் வீட்டை ... மேலும் பார்க்க