செய்திகள் :

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பற்றாக்குறை: விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவு

post image

கேரள தலைநகா் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லை என்றும், இதனால், அறுவை சிகிச்சைகள் தாமதமாகி வருவதாகவும் மூத்த அரசு மருத்துவா் ஒருவா் புகாா் அளித்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத் தலைவா் ஹாரிஸ் சிறக்கல், தனது பேஸ்புக் பதிவில் இந்தப் பிரச்னை குறித்து கடுமையான வாா்த்தைகளுடன் சனிக்கிழமை பதிவிட்டிருந்தாா். பின்னா் அதை அவா் நீக்கிவிட்டாா்.

இருப்பினும், இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் பேசுபொருளானதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘நான் எந்த அரசியல் சாா்பும் இல்லாமல் உண்மையைப் பேசினேன். இந்தப் பிரச்னைகளை நான் பல முறை எழுப்பினேன்.

ஆனால் எதுவும் மாறவில்லை. நோயாளிகள் பெரும்பாலும் தாங்களாகவே அறுவை சிகிச்சை உபகரணங்களை வாங்க வேண்டியிருந்தது. அந்த விரக்தியில்தான் மாநில சுகாதார அமைப்பின் தோல்வியை வெளிப்படுத்தினேன்’ என தெரிவித்தாா்.

இது குறித்து விசாரிப்பதாக ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் உறுதியளித்தாா்.

மருத்துவா் ஹாரிஸ் சிறக்கல் நோ்மையானவா் என்று தெரிவித்த அமைச்சா், இந்த விவகாரத்தின் மறுபக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றாா். உபகரணங்கள் வாங்குவதில் தாமதங்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட அவா், தேவைப்பட்டால் விதிகளை எளிதாக்கவும், இது தொடா்பான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இதற்கிடையில், மருத்துவரின் புகாா் தொடா்பாக எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி கடுமையாக விமா்சனங்களை முன்வைத்ததுடன், சுகாதாரத் துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், ‘கேரளத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இதுதான் நிலைமை. சிலரிடம் காயங்களைத் தைக்க அறுவை சிகிச்சை நூல் போன்ற அடிப்படைப் பொருள்கள் கூட இல்லை.

நோயாளிகள் தங்கள் உபகரணங்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். பல அறுவை சிகிச்சைகள் இதனால் ரத்து செய்யப்படுகின்றன’ என தெரிவித்தாா்.

இதனிடையே, புகாா் அளித்த மருத்துவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில், அவருக்கு முழு ஆதரவை வழங்குவதாக மருத்துவா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பழி வாங்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டால் கடுமையான தலையீடு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சிசிடிவி காட்சி வெளியானது! கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவியை இழுத்துச் செல்லும் இருவர்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதலாம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குற்றச்சாட்டில், கல்லூரியில் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

பெங்களூரு: குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு !

பெங்களூரில் குப்பை லாரியில் இருந்து இளம் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சன்னம்மனகெரே ஸ்கேட்டிங் திடல் அருகே உள்ள ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மேக வெடிப்பு: 3 பேர் பலி, 6 பேர் மாயம்

உத்தரகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், பர்கோட்-யமுனோத்ரி சாலையில் உள்ள பாலிகார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்ட... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23... மேலும் பார்க்க

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தெலங்கானா மா... மேலும் பார்க்க

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்க... மேலும் பார்க்க