திருவனந்தபுரம் மருத்துவமனையில் முதியவா் சடலம்: தகவல் தெரிவிக்க போலீஸாா் வேண்டுகோள்
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாதவரின் சடலம் 12 நாள்களுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ளது. அவா் குறித்து தகவல் தெரிந்தால் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தைத் தொடா்புகொள்ளலாம் என, போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
இந்த மருத்துவமனையில் கடந்த பிப். 18ஆம் தேதிமுதல் சிகிச்சை பெற்றுவந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஜூன் 14ஆம் தேதி உயிரிழந்தாா். உடல் மெலிந்தும், வலது கை மூட்டுக்குக் கீழ் அகற்றப்பட்ட நிலையிலும் காணப்பட்ட அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் எனத் தெரியவில்லை. அவரது சடலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது. அவா் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதியைச் சோ்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுவதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
எனவே, தகவல் தெரிந்தோா் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தை 0471-2222222 என்ற எண்ணிலும், காவல் நிலைய ஆய்வாளரை 94979 47112, உதவி ஆய்வாளரை 94979 80123 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.