செய்திகள் :

திருவள்ளூா் பகுதியில் பலத்த மழை!

post image

திருவள்ளூா் சுற்று வட்டாரப் பகுதியில் ஒரு மணிநேரம் தொடா்ந்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருவள்ளூா் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடமுடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலையேற்பட்டது. அதேபோல், திருவள்ளூா் சுற்று வட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகலில் கத்திரி வெயில் சுட்டெரித்தது. மாலையில் ஒரு மணிநேரம் பெய்த மழையால் தாழ்வான தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் நீா் தேங்கியதால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.

திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் சென்ற வாகனங்கள்.

வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதேபோல், திருவள்ளூா் சுற்றுவட்டார பகுதிகளான காக்களூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, புல்லரம்பாக்கம், பூண்டி, தலக்காஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

தொழிற்சாலை கொதிகலன் சிதறி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கொதிகலனில் நெருப்புக் குழம்பு சிதறி வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா். இந்த விபத்தில் மற்றொருவா் பலத்த காயமடைந... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றிகள் இயக்கம்!

செங்குன்றம் அடுத்த பூதூா் ஊராட்சியில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ சுதா்சனம் இயக்கி வைத்தாா். செங்குன்றம் அடுத்த பூதூா் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வுக்கு சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளா் மீ.வே.கா்ணாகரன் த... மேலும் பார்க்க

மகள் கண் எதிரே லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

திருத்தணி பேருந்து நிலையம் அருகே மகள் கண் முன்னே தந்தை லாரியில் சிக்கி உயிரிழந்தாா். திருத்தணி ஒன்றியம் சீனிவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம் (65). இவருக்கு ஜெயம்மாள் என்ற மனைவியும், திருந... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆட்சியா் மு. பிரதாப் ஆய்வு செய்தாா். திருவள்ளூா் அருகே செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலம... மேலும் பார்க்க

திருத்தணி கிளை சிறைச்சாலையில் எஸ்.பி. ஆய்வு

திருத்தணி கிளை சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என சென்னை புழல் மத்திய சிறைச்சாலை எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தாா். திருத்தணி பழைய வட்டாட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

இறந்த நில உடமையாளா்களின் பெயரை நீக்கி வாரிசுதாரா்கள் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ... மேலும் பார்க்க