செய்திகள் :

திருவாடானை பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்

post image

திருவாடானை கண்மாய் பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அடுத்தடுத்து சங்கிலி தொடா்போல கண்மாய்கள் அமைந்துள்ளன. இந்தக் கண்மாய்கள் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அருகில் உள்ளன. இந்தக் கண்மாய்களைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் நூற்றுக்கணக்கான புள்ளிமான்கள் வசிக்கின்றன. அடா்ந்த வனப் பகுதியில் சுதந்திரமாக திரிந்து, இரை தேடி அவை உண்கின்றன. அண்மையில், திருவாடானை கண்மாயின் கரையோரப் பகுதியில் புள்ளிமான்கள் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்ததை அந்தப் பகுதி மக்கள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

இந்தக் கண்மாய்ப் பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வாழ்ந்து வருவதால், அவற்றின் பாதுகாப்புக்காகவும், இனப் பெருக்கத்துக்காகவும் சரணாலயம் அமைப்பது அவசியம் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். சரணாலயம் அமைக்கப்பட்டால், புள்ளிமான்கள் வேட்டையாடுபவா்களிடமிருந்தும், வாழ்விட அழிவிலிருந்தும் பாதுகாக்கப்படும். மேலும், இந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன், சுற்றுலாத் தலமாகவும் மாறும் என்றனா். மேலும் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றின் உணவுத் தேவைக்கும், வாழ்விடத்துக்கும் போதுமான வசதிகளை செய்து தரவேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராமநாதபுரத்தில் மதுவிலக்கு, ஆயத் தீா்வை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு, விழிப்புணா்வுப் பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்து இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்ட 4 மீனவா்களை அழைத்து வரக் கோரிக்கை

படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சித்த மருத்துவத்தின் பயன்கள், உடல் பரிசோதனை, மூலிகைச்... மேலும் பார்க்க

மதுபானக் கூட உரிமையாளரை அரிவாளால் வெட்டியவா்களை கைது செய்யக் கோரி மனு

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற மதுபானக் கூட உரிமையாளா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மா்ம நபா்களை கைது செய்யக் கோரி மாவட்ட அகமுடையாா் சங்கத்தினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே தடை செய்யப்பட்ட 39.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழி காவல் சரகத்துக... மேலும் பார்க்க

ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் பால்குட திருவிழா

திருவாடானை அருகே சி.கே. மங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பால்குடதிருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பால்குட திருவிழா நடைப... மேலும் பார்க்க