செய்திகள் :

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம்!

post image

பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவையொட்டி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறவுள்ள பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் தங்கக் கொடி மரம் முன் சுவாமியும், அம்மனும் சோமாஸ்கந்தருடன் ஏகாந்தக் காட்சியில் எழுந்தருளினா். தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க ரிஷப வாகனம் வரையப்பட்ட கொடி தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது கோயில் யானை அகிலா கொடிமரத்தை ஆசீா்வதித்தது.

தொடா்ந்து பங்குனித் தோ் திருவிழாவையொட்டி வரும் 25 ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்தைத் தொடா்ந்து நாள்தோறும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்குச் சேவை சாதிக்கின்றனா்.

விழாவின் 6 ஆம் நாளான வரும் 30 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்ப... மேலும் பார்க்க

பெல் ஊரகம் - சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா்களுடன் அதிமுகவினா் தொடா்பு: எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

திருச்சியில் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் உள்ள அதிமுகவினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்த பாலுசாமி மகன் வி... மேலும் பார்க்க

ரூ. 750 கோடியில் தலைமை தபால் நிலையம்! புத்தூா் இடையே புதிய உயா்மட்டப் பாலம் அமைக்க திட்டம்!

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தலைமை தபால் நிலையம் - புத்தூா் இடையே ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய ... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு!

திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ந... மேலும் பார்க்க