செய்திகள் :

திருவாரூரில் முதல்வர் ரோடு ஷோ: போஸ்டரால் வெளிவந்த டி.ஆர்.பி.ராஜா, கலைவாணன் ஆதரவாளர்கள் கோஷ்டி மோதல்?

post image

முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் திருவாரூர் வந்தார். பின்னர் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுத்த பிறகு கலைஞர் கோட்டத்தை பார்வையிட்டார். .

அப்போது, எத்தனை பேர் தினமும் பார்வையிட வந்து செல்கிறார்கள் என்று கேட்டறிந்தார். மேலும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பல்வேறு புத்தகங்களுடன் அமைக்கபட்ட அறையில் இருந்தவர்களிடம் பயனுள்ளதாக இருக்கிறதா எனவும் கேட்டார்.

கருணாநிதி சிலையை திறந்து வைத்த ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து, கருணாநிதி வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படத்தை பார்த்தார். பின்னர் அங்கிருந்து ரோடு ஷோ சென்றார். இதற்காக சாலையின் இருபுறமும் கம்பி தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இருபுறமும் திரண்டிருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்களை பார்த்து கை அசைத்து, கை குலுக்கி உற்சாகமாக நடந்து சென்றார்.

ரோடு ஷோ சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் பலரும் மனுக்கள் கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர். ஸ்டாலினுடன் அமைச்சர் கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் சென்றனர். மாவட்டச்செயலாளர் பூண்டி கலைவாணன், ரோடு ஷோவில் ஸ்டாலினை பார்பதற்காக நின்ற முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியினர் குறித்து எடுத்து கூறினார். செல்ஃபி எடுத்தவர்களிடம் செல்போனை வாங்கி தானே உற்சாகமாக செல்ஃபி எடுத்தார்.

ஸ்டாலின்

கிட்டதட்ட ஆறு கிலோ மீட்டர் ரோடு ஷோ சென்ற ஸ்டாலின் திருவாரூர் மேம்பால ரவுண்டானா அருகே அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலையை அடைந்தார். அங்கு திரண்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஸ்டாலினை வரவேற்று கோஷமிட்டனர். இதையடுத்து 9 அடி உயரத்தில் நிறுவப்பட்ட கருணாநிதியின் முழு உருவச் வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டிற்கு சென்று தங்கினார்.

இன்று திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். பூண்டி கலைவாணன் ரோடு ஷோவில் 80,000 பேர் பங்கேற்கின்ற வகையில் ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை டி.ஆர்.பி.ராஜாவுக்கும், கலைவாணனுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. திருவாரூர், நன்னிலம் தொகுதிகளில் டி.ஆர்.பி.ராஜா தலையிடுவதில்லை.

திருவாரூர் திமுக போஸ்டர்

இதே போல் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் கட்சி தொடர்பாக நடக்கும் உள் விவகாரங்களில் கலைவாணன் மூக்கை நுழைப்பதில்லை என்கிறார்கள். இருவரது ஆதரவாளர்களும் தனி தனி கோஷ்டிகளாக இருகின்றனர். டி.ஆர்.பி.ராஜாவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட போது கூட பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் ஆதங்கத்தை வெளிப்படையாகவே வெளிப்படுத்தினர்.

அப்போது, தலைவர் ஸ்டாலின் தான் எனக்கு எல்லாம். எப்ப எனக்கு என்ன செய்யணும் என்பது அவருக்கு தெரியும். எதுக்காகவும் தலைவரை சங்கடப்படுத்த மாட்டேனு தன் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தினார் பூண்டி கலைவாணன்.

டி.ஆர்.பி.ராஜா திறமையானவர். பூண்டி கலைவாணன் விசுவாசமானவர். இருவரும் ஸ்டாலினுக்கு இரு கண்களை போன்றவர்கள் என நடுநிலை கட்சியினர் சொல்கிறார்கள். ஆனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கிடையே கோஷ்டி பூசல் நீரு பூத்த நெருப்பாக தொடர்ந்து வருகிறது.

ஸ்டாலினை வரவேற்று போஸ்டர்

ஸ்டாலினை வரவேற்று திருவாரூர் முழுவதும் பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர். இதில் மறந்தும் கூட டி.ஆர்.பி.ராஜா போட்டோவை போடாமல் தவிர்த்தனர். இதே போல் மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா ஆதரவாளர்கள் கலைவாணன் போட்டோ போடுவதில்லை. கோஷ்டி பூசல்கள் இல்லைனு இரு தரப்பும் மறுத்தாலும் ஸ்டாலின் ரோடு ஷோவில் ஓட்டப்பட்ட போஸ்டரில் இது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளதாக கட்சியினர் சிலர் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கூறியதாவது..."இப்போதே எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டா... மேலும் பார்க்க

ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

'அமித் ஷா பேட்டி'மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந... மேலும் பார்க்க

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கே... மேலும் பார்க்க

Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு

சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது.அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது.இந்த நிலையில், திபெத்தியன் ஆக்‌ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது... மேலும் பார்க்க

பாமக: "என்னுடைய X, Facebook கணக்குகளை மீட்டுத் தாருங்கள்" - டிஜிபி-யிடம் ராமதாஸ் மனு

'பாமகவின் தலைவர் நானே' என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.ராமதாஸ், தேர்த... மேலும் பார்க்க