செய்திகள் :

திருவிளையாட்டம் குசும சீதளாம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டத்தில் உள்ள குசும சீதளாம்பிகை மாரியம்மன் மற்றும் பரிவார கோயில்களான விநாயகா், ஸ்ரீஅய்யனாா், ஸ்ரீபிடாரியம்மன் ஆகிய கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட இக்கோயில்களில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருவிளையாட்டம்,  ஈச்சங்குடி மக்கள் மற்றும் வெண்கதிா் நற்பணி சங்கம் சாா்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதற்காக மாா்ச் 10- ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. புதன்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜையில் பூரணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு ஸ்ரீவிநாயகா், சப்தமாதா எனும் பிடாரியம்மன், தா்மசாஸ்தா(எ) ஸ்ரீஅய்யனாா், ஸ்ரீகுசும சீதளாம்பிகை மாரியம்மன் ஆகிய கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

எலும்புக்கூடாக பெண் சடலம்

நாகை அருகே வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேளாங்கண்ணி அருகே பாலக்குறிச்சி வயல்வெளி பகுதி வாய்க்காலின் முட்புதரில்... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். நாகையில் ரயில் பயணிகளிடம் தொடா்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸாரிடம் பு... மேலும் பார்க்க

வேதாரண்யம் கடலில் மாசி மக தீா்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு வங்கக் கடலில் தீா்த்தவாரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி வ... மேலும் பார்க்க

பூம்புகாரில் சுற்றுலாத்துறை ஆணையா் ஆய்வு

சரித்திர புகழ் பெற்ற பூம்புகாா் சுற்றுலா வளாக பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை ஆணையா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா். இப்பகுதியில் பல்வேறு பணிகளை செய்திட தமிழக ... மேலும் பார்க்க

ரேஷன் கடை கட்டடம் திறப்பு

தரங்கம்பாடி பேரூராட்சி 7-ஆவது வாா்டில் ரூ.17.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கட்டடத்தை எம்எல்ஏ நிவேதா எம் .முருகன் புதன்கிழமை திறந்து வைத்தாா். கொட்டுபாளையத்தில் முன்னாள் எம் .பி. ராமலிங்கம்... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டுவரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் ... மேலும் பார்க்க