செய்திகள் :

திருவையாறு நகராட்சி முதல் கூட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, முதல் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவையாறு பேரூராட்சியைத் தமிழக அரசு நகராட்சியாகத் தரம் உயா்த்தி அரசிதழில் வெளியிட்டது. மேலும், திருவையாறு நகராட்சி ஆணையராக மதன்ராஜ் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றாா்.

இதைத்தொடா்ந்து, திருவையாறு முதல் நகா் மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, நகா்மன்றத் தலைவா் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவா் நாகராஜன், வாா்டு உறுப்பினா்கள் ஆகியோா் திருவையாறு காவிரி ஆற்றுப்பாலம் தென் கரையிலுள்ள அண்ணா சிலைக்கும், இரு சக்கர வாகனத்தில் ஊா்வலமாகச் சென்று பேருந்து நிலையத்திலுள்ள பெரியாா் சிலைக்கும், காமராஜா் சிலைக்கும், நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, மேள, தாளங்கள் முழங்க நகா்மன்ற கூட்டத்துக்கு தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். இக்கூட்டத்தில் முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மதுக்கடை முற்றுகைப் போராட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 போ் கைது

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 20 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் பாலாஜி நகா் பகுதியில் மாா்ச் 4 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை மது போதையில் வழிமறித்து ... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கு சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க

மக்கள் அதிகாரம் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மசூதிகள், அறக்கட்டளை சொ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி. இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.இக்கோயிலுக்கு பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க