செய்திகள் :

திருவையாற்றில் சூறாவளி காற்றுடன் மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!

post image

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் நேற்று(மே 4) இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

தஞ்சை மாவட்டம் திருவையாறு கடுவெளி ஆச்சனூர், கோனேரிராஜபுரம், தில்லை ஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிருக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வாழை மரங்கள் விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில், நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் செலவு செய்து, வெட்டும் பருவத்தில் வாழைத்தாரோடு மரங்கள் முறிந்து சாய்ந்துள்ளதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேதம் அடைந்துள்ள வாழை மரங்களுக்கு தமிழக அரசு தக்க இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள... மேலும் பார்க்க

மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வணிகர் சங்க கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர... மேலும் பார்க்க

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் ... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவு... மேலும் பார்க்க

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டைச் சே... மேலும் பார்க்க