செய்திகள் :

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு

post image

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியாக 8 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.

இதனிடையே உள்ளாட்சி கேளிக்கை அதிகமாக உள்ளதாகவும் எனவே அதனைக் குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

குறிப்பாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் இந்த கேளிக்கை வரியால் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்தனர்.

சத்தீஸ்கரில் தொடரும் அவலம்! நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் படுகாயம்!

இந்த நிலையில் திரைப்படத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்து வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 சதவீதத்தில்தில் இருந்து 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணைக்கு திரைப்படத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இளம் எம்.பி.யை கரம்பிடிக்கும் ரிங்கு சிங்! காதல் திருமணமா?

சமாஜவாதி கட்சியின் இளம் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜை இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேச... மேலும் பார்க்க

மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!

கேரளத்தில் மகளின் திருமணத்துக்கு முந்தைய நாள், கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.மலப்புரத்தில் உள்ள தனலூரைச் சேர்ந்தவர் சாய்னாபா (வயது 44). இவரது மகள் கைருனீசாவின் திருமணம் ச... மேலும் பார்க்க

கோலியின் உணவகத்துக்கு அபராதம்! எதற்கு?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒன் 8 கம்யூன் என்ற பிரபல மதுபான விடுதி மற்றும் உணவகத்தை வ... மேலும் பார்க்க

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 பேர் பலி

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள். சிக்கிமில் பெய்த கனமழை காரணமாக சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ... மேலும் பார்க்க

6 ஆண்டுகளில் முதன்முறை: கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்காத மோடி?

ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில், ஜி7 மாநாடு ஜூன் 15 - 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

தெலங்கானா மக்களின் விருப்பங்கள் இன்னும் நிறைவேறவில்லை: அமைச்சர்

கடந்த 10 ஆண்டுகளில் தெலங்கானா மக்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என்று நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். தெலங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு மாநில பாஜக அலுவலகத... மேலும் பார்க்க