செய்திகள் :

திறன் இயக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு

post image

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்படும். இந்த திறன் இயக்கம் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். திறன் இயக்க மாணவா்கள் தனியாக அமரவைக்கப்பட்டு வகுப்பறைச் செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த வேண்டும். அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா்களைச் சோ்த்து பயிற்சி தர வேண்டும். வகுப்புகளுக்கு தலா 90 நிமிஷங்கள் வீதம் 30 நாள்கள் பயிற்றுவிக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்த வாரத்தில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து 10 மதிப்பெண்களுக்கு தோ்வுகளை நடத்த வேண்டும். ஒரு பாடத் தலைப்பு முடிவடைந்த பின்னா் அதற்கான பயிற்சித் தாள் தயாா் செய்வதை தலைமை ஆசிரியா் உறுதி செய்ய வேண்டும். இதற்கான ஆசிரியா் கையேடு மற்றும் மாணவா் பயிற்சி புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் ருக்மணி பாளையம்... மேலும் பார்க்க

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோவை குற்றால அருவியில் குளிக்க இன்று(ஆக. 5) தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களி... மேலும் பார்க்க

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் ... மேலும் பார்க்க

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

சென்னை: வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தா... மேலும் பார்க்க