செய்திகள் :

திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: ஆட்ட நாயகன் அசுதோஷ் ஷர்மா

post image

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சோ்க்க, தில்லி 19.3 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 211 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

இக்கட்டான சூழலில் தில்லி வீரா் அசுதோஷ் சா்மா அதிரடியாக விளையாடி அணியை ‘த்ரில்’ வெற்றிக்கு வழிநடத்தினாா்.

முதல் 20 பந்துகளில் 20 ரன்களும் அடுத்த 11 பந்துகளில் 46 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

ஆட்ட நாயகன் விருதுபெற்ற பின்னர் அசுதோஷ் சர்மா பேசியதாவது:

ஷிகர் தவானுக்கு சமர்ப்பணம்

கடந்த சீசன்களில் சில இன்னிங்ஸ்களில் வெற்றிகரமாக இலக்கை முடிக்கவில்லை. ஓராண்டு முழுவதும் இதை எப்படி செய்வதென நான் இதில் கவனத்தை செலுத்தினேன்.

நான் கடைசி ஓவர் வரை விளையாடினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

விப்ராஜ் நன்றாக விளையாடினார். அவரை அதிராடியாக விளையாடும்படி கூறினேன். அழுத்தத்திலும் அவர் அமைதியாக இருந்தார்.

இந்த விருதை எனது ஆலோசகர் ஷிகர் தவானுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கடைசி சீசன் எனக்கு சிறப்பாக இருந்தது. அது எனது வரலாறாகவிட்டது. அதிலிருந்து நான் நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொண்டு பலவீனங்களை சரிசெய்தேன். உள்ளூர் கிரிக்கெட்டில் இதை சோதித்து பார்த்தேன்.

நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அது ஆட்டத்தின் ஒரு பகுதி. மோஹித் ஒரு ரன் எடுத்தால் நான் சிக்ஸர் அடிக்கலாம் என இருந்தேன். எனது திறமை மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார்.

கடந்த சீசனில் சுதோஷ் சர்மாவின் ஐபிஎல் இன்னிங்ஸ்:

குஜராத் அணிக்கு எதிராக 31 (17)

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 33* (15)

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 31 (16)

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 61 (28)

197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; விக்கெட்டுகளை இழந்து திணறும் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்... மேலும் பார்க்க

சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது; அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன்!

சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ ச... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் பதிரானா!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் ப... மேலும் பார்க்க

சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்: ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கி விற... மேலும் பார்க்க

எம்.எஸ்.தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் இப்படி நினைப்பது சரியா? அம்பத்தி ராயுடு சொல்வதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சென்... மேலும் பார்க்க

பந்துவீச்சாளர்களுக்கு அநீதி..! ஷர்துல் தாக்குர் ஆவேசம்!

லக்னௌ அணி வேகப்பந்து வீச்சாளர் வீரர் ஷர்துல் பந்துவீச்சாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.ஓவருக்கு 11 ரன்ரேட் என்கிற விகிதத்தில் அதிரடியாக விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரின் 7-ஆவது ஆட்டத்தில... மேலும் பார்க்க