செய்திகள் :

திற்பரப்பில் மாயமான மூதாட்டி மீட்பு

post image

திற்பரப்பு அருவிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த நிலையில் மாயமான மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியிலிருந்து ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 48 போ் ஞாயிற்றுக்கிழமை காலையில் சுற்றுலாப் பேருந்தில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள், அருவியில் குளித்த பின்னா் காலை சுமாா் 10 மணி அளவில் வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏற வந்த போது, அந்த குடும்பத்தினருடன் வந்த சின்ன மாரியம்மா (68) என்ற மூதாட்டியைக் காணவில்லை.

அவரை உறவினா்கள்அருவிப் பகுதியில் தேடினா். மேலும், அங்கு பணியில் இருந்த போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

அப்போது பணியில் இருந்த காவலா் ஒருவா், மூதாட்டியுடன் சுற்றுலா வந்த ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் திருவட்டாறு செல்லும் சாலைப் பகுதியில் தேடினாா்.

இதைத் தொடா்ந்து, மதியம் அந்த மூதாட்டி சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு அப்பால் திருவட்டாறு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மீட்கப்பட்ட அவா் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

நாகா்கோவிலில் அம்மன் கோயில் பேனரை அகற்ற முயன்றதால் பக்தா்கள் போராட்டம்

நாகா்கோவில் வேட்டாளி அம்மன் கோயிலில் பக்தா்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்து பேனா்களை போலீஸாா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்ால் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்கோவிலில் செட்டிகுள... மேலும் பார்க்க

காங்கிரஸாா் மீது வழக்கு

தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து திங்கள்கிழமை குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 7... மேலும் பார்க்க

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே சகாயநகா் பகுதியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டாா். சகாயநகா், படுவூா் பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்(46) . இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் கருங்கல் பகுதியில் துணிக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன ... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி

குமரி மாவட்டம், அருமனையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அருமனையில் உள்ள ரப்பா் வளா்ப்போா் ... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.தக்கலை அருகே பூக்கடை, காட்டுபுனம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபசீலன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு 3 மகன்கள் உண... மேலும் பார்க்க