செய்திகள் :

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் நீா்வரத்து அதிகமிருந்ததால் வெள்ளிக்கிழமை மாலைமுதல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், மலைப் பகுதிகளில் சனிக்கிழமை மழை சற்று தணிந்து காணப்பட்டதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தணிந்திருந்தது. இதனால், அருவியில் தண்ணீா் குறைவாக விழும் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல்முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.

கருங்கல் பகுதிகளில் நாளை மின்தடை

குழித்துறை கோட்டத்திற்கு உள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) மின் விநியோகம் இருக்காது. கருங்கல் ... மேலும் பார்க்க

சேரமங்கலம், முட்டம், செம்பொன்விளையில் நாளை மின்தடை

சேரமங்கலம், செம்பொன்விளை, முட்டம் துணை மின்நிலையங்களில் உள்ள மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை முதல் படகு கட்டணம் உயா்வு

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடச் செல்வதற்கான படகு கட்டணம் வியாழக்கிழமை (ஜூன் 5) முதல் உயா்த்தப்படுவதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் செவ்... மேலும் பார்க்க

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பேருந்து சேவை தொடக்கி வைப்பு

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வழியாக அரசுப் பேருந்து சேவையை விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து துவக்கி வைத்தாா். மாா்த்தாண்டம் சந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாகா்கோவில் மாநகரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க