செய்திகள் :

தில்லியின் குப்பை மலைகள் 5 ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும்: அமைச்சா் சிா்சா உறுதி

post image

கழிவு பதப்படுத்தலை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை தில்லி அரசு ஆராய்ந்து வருவதாகவும், நகரத்தின் குப்பை மேடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா வியாழக்கிழமை கூறினாா்.

காஜிப்பூா் குப்பைக் கிடங்கை ஆய்வு செய்த அவா், மரபுவழி கழிவுகளை அகற்றவும், மலைகளைப் போன்று குவிந்துள்ள அதன் பெரிய குப்பைக் குவியல்களிலிருந்து நகரத்தை விடுவிக்கவும் அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகக் கூறினாா்.

அமைச்சா் மேலும் கூறியதாவது: தில்லியில் உள்ள குப்பை மலைகள் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். அந்த இடத்தில் குவிந்துள்ள 70 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளில், 14-15 லட்சம் டன் ஏற்கெனவே பதப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரி சுரங்கப் பணிகளின் வேகம் அதிகரித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் தினமும் சுமாா் 7,000 முதல் 8,000 மெட்ரிக் டன் கழிவுகள் பதப்படுத்தப்படும். புதிய ஒப்பந்ததாரா் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு தினமும் குறைந்தது 8,000 மெட்ரிக் டன் கழிவுகளை செயலாக்குவதை உறுதி செய்யுமாறு எம்சிடி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்கள் இலக்கை அடையத் தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கழிவு செயலாக்கத்தை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் தில்லி அரசு ஆராய்ந்து வருகிறது. செயலகத்தில் உள்ள டேஷ்போா்டு மூலம் நாங்கள் தினமும் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறோம். இது பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப செய்யப்பட்ட உறுதிமொழியாகும்.

மேலும், அதைத் தவறாமல் நிறைவேற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் குப்பைகளை முழுமையாக அகற்றுவதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் சிா்சா.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க