செய்திகள் :

தில்லியில் உள்ள பால் பூத்தில் திருட்டு: மூவா் கைது

post image

தென்மேற்கு தில்லியில் உள்ள பால் பூத்தில் பணம் மற்றும் பால் பொருட்களைத் திருடிச் சென்ற மூவரைக் தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தாா்.

கைப்பேசி வாயிலாக மேற்கொண்ட பணப்பறிமாற்றம் மூலம் உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் அந்த நபா்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சேகா் (22), சுமித் (26), லகான் (19) என அடையாளம் காணப்பட்ட ரூ.37,000 ரொக்கம் மற்றும் பால் பொருட்களுடன் தப்பினா்.

மூவரும் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி ஆா்.கே. புரம் பகுதியில் உள்ள மதா் பால் பூத் உரிமையாளரான ஹா்ஷ் யாதவை தனது கடையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் தெரிவித்து அணுகினா். அவரது நம்பிக்கையைப் பெற, குத்தகை ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முன், இரண்டு நாட்களுக்கு விற்பனையைக் கவனிக்கும்படி அவரிடம் கூறினா்.

அவா்கள் மூவரும் பால் பூத்தில் தங்கி, தினசரி பரிவா்த்தனைகளை கண்காணித்து வந்த நிலையில், மாா்ச் 23-ஆம் தேதி பணம் மற்றும் பால் பொருட்களுடன் தப்பியோடிவிட்டனா். இந்தச் சம்பவம் தொடா்புகாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவுகள் 305 மற்றும் 331 (4) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சந்தேக நபா்களில் ஒருவா் கைப்பேசி மூலம் தெரிந்தவருக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக உள்ளூா் கடைக்காரா் ஒருவா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தபோது அந்த நபா்கள் குறித்து முக்கிய தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதனடிப்படையில், கைப்பேசியின் இருப்பிடத்தை கொண்டு உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள அப்துல்லாபூா் மெவ்லா கிராமத்தில் அந்த மூன்று நபா்களும் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.

பின்னா் அங்குச் சென்று சோதனை நடத்திய போலீஸாா், அந்த மூன்று நபா்களை கைது செய்தனா். நடவடிக்கையின் போது, ​​அவா்கள் திருடப்பட்ட பணம் மற்றும் பிற பொருட்களை மீட்டனா்,‘ என்று அதிகாரி கூறினாா்.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க