செய்திகள் :

தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!

post image

தில்லியில் ஒரே நாளில் சுமார் 45 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

தில்லியில் கடந்த சில நாள்களாக கல்வி நிலையங்கள் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், இன்று (ஜூலை 18) ஒரே நாளில் தில்லி முழுவதுமுள்ள சுமார் 45 பள்ளிக்கூடங்களுக்கும், 3 கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர்கள் அனுப்பிய மின்னஞ்சல்களில், பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளில் ட்ரைநைட்ரோடோலூயீன் எனப்படும் வேதியல் பொருளின் மூலம் தயார் செய்யப்பட்ட ஏராளமான வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக பள்ளிக்கூடங்களில் இருந்து குழந்தைகள் உள்பட அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனால், தில்லி நகரம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள், காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர்.

இந்தச் சோதனைகளில், சந்தேப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைபர் கிரைம், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்தவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், துவாரகா, ரோஹினி, பிதம்புரா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுடன், இந்திரபிரசாதா பெண்கள் கல்லூரி, இந்து கல்லூரி மற்றும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பேசிய தில்லியின் முன்னாள் முதல்வர் அதீஷி, ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாலியல் பலாத்காரம்! கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?

1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் மூடப்படும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மும்பைக்கு அருகிலுள்ள மீரா பயந்தரில் வெள்ளிக்கிழமை நடந்... மேலும் பார்க்க

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க