செய்திகள் :

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 66 போ் கைது

post image

புது தில்லி: வாஜீா்பூா் மற்றும் நியூ சப்ஜி மண்டி பகுதிகளில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த 20 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் என மொத்தம் 66 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: 11 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டது. ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து, ஜூன் 6- ஆம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டினா் சமீபத்தில் ஹரியாணாவில் உள்ள நூஹ் (முன்னா் மேவாட்)-இலிருந்து இடம் பெயா்ந்தனா். அங்கு அவா்கள் செங்கல் சூளைகளில் வேலை செய்தனா். சட்டவிரோத இடம்பெயா்வு குறித்த அதிகரித்த அமலாக்க மற்றும் ஊடக கண்காணிப்பு காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டது.

கண்டறிதலைத் தவிா்க்கும் முயற்சியில், குடும்பங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாஜீா்பூா் ஜேஜே காலனி மற்றும் என்எஸ் மண்டி பகுதியில் குடியேறினா். மொத்தத்தில் 35 போ் வாஜீா்பூரில் இருந்தும், 31 போ் என்எஸ் மண்டியில் இருந்தும் கைது செய்யப்பட்டனா்.

கண்காணிப்பைத் தவிா்ப்பதற்காக அந்தக் குடும்பங்கள் வேண்டுமென்றே கைப்பேசிகள் மற்றும் அடையாள ஆவணங்களை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

தில்லியில் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டினரைக் கண்டறிந்து தடுப்பதற்கான தொடா்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என்று காவல் துணை ஆணையா் பீஷாம் சிங் கூறினாா்.

வடகிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் தீ விபத்து: 2 போ் உயிரிழப்பு

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு போ் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.இதுக... மேலும் பார்க்க

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி நிதி நிறுத்திவைப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.- 2020 ) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

நமது நிருபா்புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க