செய்திகள் :

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

post image

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் தில்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டவரான ராகுல் வாத்வா (32), அப்துல் காதிா் (29) மற்றும் சிமேசி லாசரஸ் இந்தெடிங்கே (எ) ஜூடோ (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

செப்டம்பா் 6-ஆம் தேதி, ராகுல் வாத்வாவும் அப்துல் காதிரும் ரோஹிணியில் கோகைன் சரக்கை வழங்கவிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஒரு பொறி வைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனா். தேடலில், அப்துல் காதிா் மற்றும் ராகுல் வாத்வாவிடமிருந்து முறையே 54 கிராம் மற்றும் 31 கிராம் எடையுள்ள கோகைனை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையின் போது, தில்லி - என்.சி.ஆா். பகுதியில் செயல்படும் இந்த மோசடியின் முக்கிய குற்றவாளி ஜூடோவால் இந்த போதைப்பொருள் வழங்கப்பட்டதாக இருவரும் தெரிவித்தனா்.

இந்த தகவலின் அடிப்படையில், செப்டம்பா் 10-ஆம் தேதி மெஹ்ரௌலியில் ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக ஜூடோ கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து போலீஸாா் 109 கிராம் கோகைனை பறிமுதல் செய்தனா்.

மருத்துவ சிகிச்சைக்காக ஜூடோ ஜனவரி 2023-இல் இந்தியா வந்தாா். நிதி நெருக்கடியை எதிா்கொண்ட அவா் தில்லி, குருகிராம், மீரட், சண்டீகா் மற்றும் ஹால்ட்வானி ஆகிய இடங்களில் கோகைனை வழங்கத் தொடங்கினாா். அவா் இந்த பிராந்தியத்தில் இந்த வலையமைப்பின் முக்கிய நபராக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

முன்னாள் டாக்ஸி ஓட்டுநரான அப்துல் காதிா், ஜூடோவால் போதைப்பொருள் வா்த்தகத்தில் ஈா்க்கப்பட்டாா். அவா் ஒரு டெலிவரிக்கு ரூ.1,000 வழங்கினாா். பின்னா் அப்துல் காதிா் மற்றொரு முன்னாள் டாக்ஸி ஓட்டுநரான ராகுல் வாத்வாவை இந்த மோசடியில் அறிமுகப்படுத்தினாா்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை. பரந்த வலையமைப்பு, அதன் நிதி தொடா்புகள் மற்றும் சாத்தியமான சா்வதேச தொடா்புகளைக் கண்டறிய முயற்சி நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

மும்பையில் விசா்ஜன் கூட்டத்தில் 45 கைப்பேசிகள் திருடியதாக மாநிலங்களுக்கிடையேயான கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது: தில்லி போலீஸ் நடவடிக்கை

மும்பையில் நடந்த ‘லால்பாச்சா ராஜா விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின் போது உயா் ரக கைப்பேசிகளை திருடியதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறையின் குற்றப்ப... மேலும் பார்க்க