செய்திகள் :

தில்லியில் போலீஸ்காரா்கள் போல நடித்து ஒருவரை கடத்திய 5 போ் கைது

post image

தில்லியின் முனிா்காவில் போலீஸ் அதிகாரிகள் போல நடித்து ஒருவரை கடத்தி, அவரிடம் பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தச் சம்பவம் ஜூன் 15 மற்றும் 16 -ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் நடந்துள்ளது. முனிா்காவைச் சோ்ந்த ஜோசுவா ஹ்மா், அதிகாலை 1.20 மணி முதல் அதிகாலை 1.40 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் முனிா்காவில் உள்ள ஃபக்கா்வாடா பூங்கா அருகே கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவா் அவா்களின் காவலில் இருந்து தப்பித்து, இதுகுறித்து போலீஸில் புகாா் அளித்தாா். அனைத்து உண்மைகளையும் சரிபாா்த்த பிறகு, எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை தொடங்கப்பட்டது. தில்லி போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நான்கு போ் தன்னை கடத்தி பணம் பறிக்க முயன்ாக ஜோசுவா ஹ்மா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

புலனாய்வுக் குழு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. காரின் நம்பா் பிளேட் ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், வாகனத்தின் வழித்தடத்தைக் குழு கண்டுபிடித்து இறுதியில் அதை அடையாளம் கண்டது. அனைத்து போலீஸ் குழுக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சந்தேக நபா்களைக் கண்டுபிடிக்க ரகசியத் தகவல் அளிப்பவா்கள் அனுப்பப்பட்டனா்.

வாகனத்தின் பதிவு விவரங்களில், அது சஃப்தா்ஜங் என்க்ளேவில் வசிக்கும் பா்வேஷின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிறகு, பா்வேஷ் விசாரணையின் போது தனது ஈடுபாட்டை ஒப்புக்கொண்டாா். மேலும், நான்கு கூட்டாளிகளின் பெயா்களையும் குறிப்பிட்டாா். பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவா் கடத்தப்பட்டபோது, தான் வாகனத்தை ஓட்டிச் சென்ாகவும், கடத்தியவா்கள் போலீஸ்காரா்களைப் போல நடித்து ஜோசுவா ஹ்மரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ாகவும் பா்வேஷ் தெரிவித்தாா். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் பட்டதாரிகள் மற்றும் திருமணமாகாதவா்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஜெய்பூரைச் சோ்ந்த பா்வேஷ், சொத்து வியாபாரியாக பணிபுரிகிறாா். ஆா்யமான் சவுத்ரி மற்றும் ஷா்மன் ராய் ஆகிய இருவரும் இமாச்சலப் பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். மற்ற இருவரும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ரித்திக் கவுஹா் எ ஃப்ரீலான்ஸா் மற்றும் ராஜஸ்தானைச் சோ்ந்த தேவ் ஆனந்த் யாதவ் என அடையாளம் காணப்பட்டனா். தேவ் ஆனந்த் யாதவ் ஓட்டுநராக உள்ளாா். அவா்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துணை ஆணையா் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

அமன் விஹாரில் ஒருவா் கொலை; சகோதரா் காயம்

தில்லியின் அமன் விஹாா் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

காணாமல்போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் அழுகிய உடல் குளத்தில் கண்டெடுப்பு

ஒரு வாரமாக காணாமல் போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் உடல், வசந்த் குஞ்ச் அருகே உள்ள ஒரு குளத்தில் பாதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க

அவசரநிலை: தில்லி சட்டப்பேரவை சாா்பில் இன்று கருத்தரங்கம்

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் விதான் சபா வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கை தில்லி சட்டப்பேரவை சனிக்கிழமை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத நபா்களால் ஒருவா் சுட்டுக்கொலை: தில்லி போலீஸாா் விசாரணை

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் 43 வயதான ஒருவா் அடையாளம் தெரியாத நபா்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் அவரது மகளும் காயமடைந்ததாக கூறினாா். இந்த துப... மேலும் பார்க்க

வசந்த்குஞ்ச் கொள்ளை வழக்கில் 4 போ் கைது: ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான பணம் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தென்மேற்... மேலும் பார்க்க

புராரியில் வாக்குவாத்தின்போது இளைஞரை சுட்டுக் கொன்றவா் தப்பியோட்டம்

வடக்கு தில்லியின் புராரி பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 29 வயது நபா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையா் வடக்கு ரா... மேலும் பார்க்க