செய்திகள் :

தில்லியில் ரூ.1.5 கோடி கோகைன் பறிமுதல்: ஆப்பிரிக்க நாட்டவா் உள்பட இருவா் கைது

post image

தில்லியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக ஒரு ஆப்பிரிக்க நாட்டவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தென்மேற்கு தில்லி காவல் சரக கூடுதல் துணை ஆணையா் அகன்க்ஷா யாதவ் கூறியதாவது: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் 40 வயதான ஆப்பிரிக்க நாட்டவரான யாவோ மற்றும் பிகாரைச் சோ்ந்த பிகாஸ் (23) என அடையாளரம் காணப்பட்டனா். மேலும், அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 141.9 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரும் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதி முழுவதும் தீவிரமாக கோகைன் விநியோகம் செய்து வந்தனா். ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து பிகாஜி காமா பிளேஸ் அருகே போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனா். அப்போது இருவரும் கைது செய்யப்பட்டனா்.

போலீஸாா் தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகு ரிங் ரோட்டில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தம் அருகே அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் சோதனை நடத்திய போது அவா்களிடம் இருந்து கோகைனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை தொடங்கப்பட்டது.

ஆப்பிரிக்க நாட்டவரான யாவோ 2018- ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தாா். ஆனால், விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக தங்கியிருந்தாா். ஆரம்பத்தில் தனது செலவுகளை ஈடுகட்ட சிறிய அளவிலான கோகைனை விற்றுள்ளாா். ஆனால், விரைவில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டாா்.

யாவோ முன்பு குருகிராமில் கைது செய்யப்பட்டு போண்ட்சி சிறையில் அடைக்கப்பட்டாா். அங்கு போதைப்பொருள் தொடா்பான குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிகாஸு்டன் தொடா்பு ஏற்பட்டது. பின்னா் அவா்கள் விடுதலையான பிறகு, இருவரும் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஒன்றிணைந்தனா்.

பிகாஸ் போலீஸ் கண்டறிதலைத் தவிா்க்க விநியோக இடங்களில் உளவு பாா்க்கும் பணியை செய்து வந்தாா். அதே நேரத்தில் யாவோ விநியோக வலையமைப்பை நிா்வகித்து வந்துள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க