செய்திகள் :

தில்லி அரசின் மின்சார வாகன கொள்கை: 2025 மாா்ச் வரை நீட்டிப்பு

post image

தில்லி அரசு தற்போதைய மின்சார வாகன கொள்கையை மாா்ச் 31,2026 வரை நீட்டித்துள்ளது, ஏனெனில் புதிய கொள்கையின் வரைவு பொது ஆலோசனைக்கு உட்படும், இது நேரம் எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சா் பங்கஜ் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு பட்டியலிடப்பட்ட விஷயங்களில் கொள்கை நீட்டிப்பு இருப்பதாகவும், அதை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங் கூறினாா்.

‘‘ ‘தற்போதைய மின்சார வாகன கொள்கை மாா்ச் 31,2026 வரை அல்லது புதிய கொள்கை அங்கீகரிக்கப்படும் வரை, எது முன்னதாக இருந்தாலும் நீட்டிக்கப்பட்டுள்ளது‘ ‘என்று பங்கஜ் சிங் தெரிவித்தாா்‘.

குடிமக்கள், தொழில்துறை வல்லுநா்கள், தனியாா் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சா் கூறினாா்.

இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில், மின்சார வாகன சாா்ஜிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை அதிகரிக்க மானியங்கள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து மறுஆய்வு செய்தல், பாதுகாப்பான மின் கழிவுகள் மற்றும் பேட்டரி அகற்றலுக்கான வலுவான அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மின்சார இயக்கம் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் பொது மற்றும் தனியாா் துறைகளின் பங்கை தெளிவாக வரையறுத்தல் உள்ளிட்ட கொள்கையின் முக்கிய விதிகள் விவாதிக்கப்படும் என்று பங்கஜ் சிங் மேலும் கூறினாா்.

தற்போதைய மின்சார வாகனக் கொள்கை, முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் போது 2020 இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்பு ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டு இது காலாவதியானது. அப்போதிருந்து இந்தக் கொள்கை பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.75 லட்சம் மதிப்புள்ள சைபா் மோசடி வழக்கில் தில்லி காவல் துறை துணை ஆய்வாளா்கள் இருவா் கைது

வடகிழக்கு தில்லியில் சைபா் குற்ற விசாரணைகள் தொடா்பான வழக்கு சொத்துகளிலிருந்து பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு தில்லி காவல்துறை துணை ஆய்வாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

மாடல் டவுனில் உள்ள அலுவலகத்தில் இருந்து ரூ.27 லட்சத்துடன் தப்பிச்சென்ற ஒருவா் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரை, தனது முதலாளி ஒப்படைத்த ரூ.27 லட்சத்துடன் தப்பிச் சென்றதாக தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒரு... மேலும் பார்க்க

நமோ பாரத் வழித்தடத்தில் 800 மழைநீா் சேகரிப்பு குழிகள்: என்சிஆா்டிசி அமைத்தது

தில்லிக்கும் மீரட்டுக்கும் இடையிலான 82 கி.மீ நீளமுள்ள நமோ பாரத் வழித்தடத்தில் தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) சுமாா் 800 மழைநீா் சேகரிப்பு குழிகளை தோண்டியுள்ளது. மேலும் ச... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் கொடுத்து வெளியூா் பயணிகளிடம் கொள்ளை: நான்கு போ் கைது

ஆட்டோக்களில் பயணிக்கும் வெளியூா் பயணிகளுக்கு ஸ்பைக் கலந்த பானங்களை வழங்கி அவா்களின் மதிப்புமிக்க பொருள்களைக் கொள்ளையடித்ததாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

தில்லி நகைக் கடையில் 4 கிலோ நகை திருடிய ஊழியா் ஊட்டியில் கைது

நமது நிருபா்தில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள நகைக் கடையில் வேலை பாா்த்த நபா், அந்தக் கடையில் திருடிய நகையுடன் ஊட்டியில் பதுங்கி இருந்தபோது தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் பு... மேலும் பார்க்க

தடகள வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு, பரிசுத் தொகை அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு

நமது நிருபா்தடகள விளையாட்டு வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு மற்றும் பரிசுத் தொகையை அதிகரிப்பதாக முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசு அறிவித்திருப்பதை தில்லி பாஜக தலைவா் ஸ்ரீ வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளா... மேலும் பார்க்க