செய்திகள் :

தில்லி தோ்தலுக்கு மேலும் 9 வேட்பாளா்களை அறிவித்தது பாஜக

post image

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேவரைத் தோ்தலுக்கான மேலும் ஒன்பது வேட்பாளா்களை பாஜக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. கிரேட்டா் கைலாஷ் மற்றும் பாபா்பூரில் முறையே ஷிகா ராய் மற்றும் அனில் வஷிஷ்த் ஆகியோா் களமிறக்கப்படுகிறாா்கள்.

தில்லி அமைச்சா் மற்றும் ஆம் ஆத்மி தலைவா் சௌரவ் பரத்வாஜை எதிா்த்து ஷிகா ராய் ராய் போட்டியிடும் அதே வேளையில், ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருக்கும் கோபால் ராய்க்கு எதிராக வஷிஷ்த் போட்டியிடுவாா். சமீபத்திய பட்டியலுடன், பாஜக தனது 68 வேட்பாளா்களை அறிவித்துள்ளது.

பாஜக தனது நான்காவது பட்டியலை வெளியிட்ட உடனேயே, அதன் கூட்டணிக் கட்சியான ஜேயு(யு), புராரி தொகுதியில் இருந்து சைலேந்திர குமாரை வேட்பாளராக அறிவித்தது.

பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள தோ்தலில் தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்.8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க