செய்திகள் :

தில்லி பாணியில் மமதா ஆட்சிக்கு முடிவு: சுவேந்து அதிகாரி

post image

தில்லியில் ஆம் ஆத்மியை தோற்கடித்ததுபோல, மேற்கு வங்கத்திலும் மமதா ஆட்சிக்கு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ளது. 2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றிப் பெற்றுள்ள நிலையில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காவிக் கட்சி வெற்றி பெரும் அடுத்த மாநிலமாக மேற்குவங்கம் இருக்கும் என்று பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

வரும் 2026 மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய சுவேந்து அதிகாரி, ”தில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு தகுந்த பதிலைக் கொடுத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தில்லியின் பெருமையை மீண்டும் கொண்டுவந்து தூய்மையான நகராக மாற்றமுடியும்.

தில்லியில் உள்ள பெரும்பாலான வங்க மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள். ஆம் ஆத்மிக்கு எதிரான வெற்றியைப் பெற்றுதந்த பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன், இனி தில்லி மக்களுக்கு இரட்டை என்ஜின் கொண்ட அரசின் பலன்கள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு

நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்... மேலும் பார்க்க

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.கோமலாஹரி பி... மேலும் பார்க்க

86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சர்க்கார் ப... மேலும் பார்க்க

தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும் தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக... மேலும் பார்க்க

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை!

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங... மேலும் பார்க்க

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அமைச்சர் ரகுபதி கேள்வி

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போ... மேலும் பார்க்க