செய்திகள் :

தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!

post image

தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் புழுதிப் புயல் ஏற்பட்டு, நகரம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

தில்லி-நொய்டா, காசியாபாத் மற்றும் குருகிராம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புழுதிப் புயலுக்கு 9 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

சஹானா என்கிற சாந்தினி ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து இரும்பு ஜன்னல் பலகை விழுந்ததில் உயிரிழந்தார். அவர் உடனடியாக சிவில்லைன்ஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தென்கிழக்கு தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் லோதி சாலை மேம்பாலம் அருகே இடியுடன் கூடிய மழையின்போது மின்கம்பம் சரிந்து சாலையில் அந்த வழியாகச் சென்ற மாற்றுத்திறனாளி மீது விழுந்ததில், அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், வடகிழக்கு தில்லியின் கோகுல்புரி பகுதியில் மரம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் அசார்(22) என்பவர் இறந்தார்.

முகர்ஜி நகர் அருகே உள்ள ஒரு பழைய நடைபாதை மேம்பாலத்தின் கிரில்லின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் கேட், மங்கோல்புரி பகுதியிலிருந்து மேலும் காயங்கள் பதிவாகியுள்ளன.

புதன்கிழமை மாலை தில்லியில் ஏற்பட்ட கடுமையான வானிலை மாற்றத்தின் காரணமாக இந்த இறப்புகள், காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம்: யுஏஇ, ஜப்பானுக்கு இந்திய குழு விளக்கம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு வியாழக்கிழமை விளக்கியது. ... மேலும் பார்க்க

நொய்டாவில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழப்பு

கிரட்டா் நொய்டா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கிரேட்டா் நொய்டாவில் உள்ள 21 அடுக்குமாடி கட்ட... மேலும் பார்க்க

பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அனைவரையும் வெளியேற்றி சோதனை

பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து, அனைவரையும் வெளியேற்றி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இது... மேலும் பார்க்க

கிரு நீா் மின் திட்ட ஊழல் வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் உள்பட 8 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

கிரு நீரி மின் திட்ட ஊழல் வழக்கில் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி... மேலும் பார்க்க

வக்ஃப் வழக்கு: இடைக்கால உத்தரவு ஒத்திவைப்பு

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. முஸ்லிம்க... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டம்: முதல்வா் ஸ்டாலின் இன்று தில்லி பயணம்

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மே 23) காலை தில்லி புறப்படுகிறாா். சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 9.50 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் தில்லி செல்லும் மு... மேலும் பார்க்க