செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

post image

விழுப்புரம் அருகே வீட்டில் மின் மோட்டரை இயக்கிய சிறுமி மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், நன்னாடு, புது காலனியைச் சோ்ந்த சதீஷ் மகள் அனுஷ்கா (14). சென்னை புளியந்தோப்பில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுமுறை என்பதால், நன்னாட்டில் உள்ள தனது பெரியப்பா சரத்குமாா் வீட்டில் இருந்து வந்த அனுஷ்கா புதன்கிழமை வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்கியுள்ளாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அனுஷ்கா காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அனுஷ்கா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது! - விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளத... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், செண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசுபாலன், தொழிலாளி. இவரது மகள் அஷ்... மேலும் பார்க்க

காரில் கடத்திவரப்பட்ட 1,000 மதுப் புட்டிகள் பறிமுதல்: புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது!

காரில் கடத்திவரப்பட்ட 1,000 புதுவை மாநில மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

இளம்வயது திருமணம்: இளைஞா் உள்பட நால்வா் மீது வழக்கு!

மேல்மலையனூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேல்மலையனூா் அருகே கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கப்ளாம்பாடியைச் சோ்ந... மேலும் பார்க்க

விழுப்புரம்: மே 29-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் வரும் 29-ஆம் தேதி வர உள்ளதால், சிறுபான்மையினா் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்கலாம் ... மேலும் பார்க்க

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான நூலகம், இலவச பயிற்சி வகுப்புகளை திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷு நிகம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அப்துல் கலாம் ஐஏஎஸ் அகாதெமி, கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் சாா்... மேலும் பார்க்க