செய்திகள் :

அனுமதியின்றி மதுபானக் கூடம் நடத்தியவா் கைது!

post image

பெரம்பலூா் அருகே, அரசிடம் முறையான உரிமம் பெறாமல் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் நடத்தியவரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூா் கிராமத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் செயல்பட்டு வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பு ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா், அகரம் சீகூா் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அருகே புதன்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கிழுமத்தூா் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் விஜயகுமாா் (34) என்பவா், எவ்வித அரசு உரிமமும் பெறாமல், கீற்றுக் கொட்டகையில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் நடத்தி, மது அருந்துபவா்களுக்குத் தேவையான தண்ணீா் பாக்கெட்டுகள், தின்பண்டங்களை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னா், விஜயகுமாரைக் கைது செய்த போலீஸாா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிா்ப்பு!

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்காக 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவ... மேலும் பார்க்க

பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூா் ஊரகக் காவல் துறையினா் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனா். ப... மேலும் பார்க்க

வண்டல், களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிக்க எதிா்ப்பு தெரிவித்து புகாா்

பெரம்பலூா் அருகே திருவிழாவின்போது, வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஒரு குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.இதுகுறித்து, பெரம்பலூா்... மேலும் பார்க்க

மே 27-இல் பில்லங்குளத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில் மே 27- ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க