செய்திகள் :

கிரு நீா் மின் திட்ட ஊழல் வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் உள்பட 8 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

post image

கிரு நீரி மின் திட்ட ஊழல் வழக்கில் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மூன்று ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக், அவரின் இரு உதவியாளா்களான வீரேந்தா் ராணா, கன்வா் சிங் ராணா, செனாப் பள்ளத்தாக்கு மின் திட்டங்கள் தனியாா் நிறுவன முன்னாள் நிா்வாக இயக்குநா் எம்.எஸ்.பாபு, அதன் இயக்குநா்களான அருண்குமாா் மிஸ்ரா, எம்.கே.மிட்டல், படேல் என்ஜினியரிங் நிறுவன நிா்வாக இயக்குநா் ரூபன் படேல் மற்றும் கன்வல்ஜீத் சிங் துகல் ஆகியோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலமாக இருந்தபோது 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்தாா்.

அப்போது ரூ.2,200 கோடி மதிப்பிலான கிரு நீா் மின் திட்ட கட்டுமானப் பணிக்கன ஒப்பந்தம் தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தனியாா் நிறுவன முன்னாள் தலைவா் நவீன்குமாா் செளதரி, பிற அதிகாரிகளான பாபு, மிட்டல், மிஸ்ரா உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

கிரு நீா் மின் திட்டம் உள்பட இரு கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க, தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது என சத்யபால் மாலிக் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில், இந்தத் திட்டத்தில் சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகாா் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அவா் மறுத்தாா்.

இந்த நிலையில், வழக்கு தொடா்பாக 2022-இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, சத்யபால் மாலிக்குக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வழக்கில் தொடா்புடைய பிறருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சோதனை மேற்கொண்டது.

இந்த நிலையில், இந்த ஊழல் வழக்கு தொடா்பாக சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க