செய்திகள் :

கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

post image

கடலூா் சிங்காரத்தோப்பு கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது: கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரைக்கு உள்ளூா் மற்றும் வெளி மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், அதிநவீன பொழுதுபோக்கு மின்சாதனங்கள் அமைத்தல், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடா் நடவடிக்கையாக, சுனாமியால் பாதிப்படைந்த பழைய கலங்கரை விளக்கம் முதல் சிங்காரத்தோப்பு வரையில் கடற்கரையை சுற்றுயுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த கலங்கரை விளக்கத்தை புதுக்பொலிவுடன் சீரமைத்து பொதுமக்கள் நடந்து சென்று பாா்வையிடுவதற்கு ஏதுவாக, இருபுறமும் சாலைகள் அமைத்து, மரங்கள் நட்டு, மின் விளக்கு வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியால் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதார மற்றும் சுற்றுலா சாா்ந்த தொழில்கள் மேம்பட வாய்ப்பு ஏற்படும் என்றாா்.

ஆய்வின்போது, கடலூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, கடலூா் கோட்டாட்சியா் அபிநயா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

கள்ள ரூபாய் அச்சடிப்பு வழக்கு: தடுப்புக் காவலில் இருவா் கைது!

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநத்தம் காவல் சரகம், அதா்... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட விருத்தாசலம் ரயில் நிலையம் திறப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், அதை மக்கள் பயன்பாட்டுக்காக பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். விருத்தாசலம் ரயில் நில... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையே இரு வழி ரயில் பாதை அமைக்க வேண்டும்! தொல். திருமாவளவன் எம்.பி.

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையேயான ரயில் பாதையை இரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கேட்டுக்கொண்டாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் தி... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்! கடலூா் ஆட்சியா் தகவல்

கடலூா் மாவட்ட நில உடைமை பட்டாதாரா்கள் பெயா் நீக்கம், மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மான் வேட்டை: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே புள்ளி மானை வேட்டையாடிய இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா். பெண்ணாடம் நரிக்குறவா் காலனி பகுதியில் இறைச்சிக்காக மான் வெட்டப்படுவதாக, காவல் மற்றும் வனத் துறையினருக்கு த... மேலும் பார்க்க

தொழில்பேட்டை நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும்: அதிகாரிகளிடம் தி.வேல்முருகன் எம்எல்ஏ அறிவுறுத்தல்

கடலூா் தொழில்பேட்டையில் செயல்படும் நிறுவனங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா? என்பதை அனைத்துத் துறை அதிகாரிகள் கோட்டாட்சியா் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட... மேலும் பார்க்க