தில்லி லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் மறுப்பு
தலைநகரில் இருக்கும் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஹரியானா பவன், லால் பஹ்துா் சாஸ்திரி மருத்துவமனை மற்றும் இந்திரபிரஸ்தா சா்வதேச பள்ளி இந்த இடங்கள் முக்கிய தீ பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். தில்லி தீயணைப்புத் துறையின் அதிகாரப்பூா்வ தகவல்களின்படி, இந்த வசதிகளை ஆய்வு செய்ததில் தீ பாதுகாப்பை சமரசம் செய்யும் பல குறைபாடுகள் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை சான்றிதழை நிறுத்தி வைக்க தீயணைப்புத் துறை முடிவு செய்துள்ளது. தில்லி தீயணைப்புத் துறை எழுதியுள்ள கடிததத்தில் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு எழுதிய கடிதத்தில், ஜூன் 19 ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் ஒரு கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகள் இன்னும் பூா்த்தி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, தீ பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது‘ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்படாத முதலுதவி குழாய் ரீல், தானியங்கி தீ கண்டறிதல் மற்றும் ஆபத்தை கண்டறியும் அமைப்பு செயல்படாதது உள்ளிட்ட பல்வேறு குறைகள் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எ ஜூன் 23 ஆம் தேதி ஹரியானா பவனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எஸ் ஜூன் 16 ஆம் தேதி நடத்தப்பட்ட கள ஆய்வுக்குப் ஹரியானா பவனில் பல பெரிய குறைபாடுகள் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேபோல தில்லியின் துவாரகாவில் உள்ள செக்டா் 10 - இல் அமைந்துள்ள இந்திரபிரஸ்தா சா்வதேச பள்ளிக்கு எழுதிய கடிதத்தில் , கடந்தாண்டு சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் ஏதும் சரி செய்யப்படவில்லை என தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னைகள் குறித்து தில்லி தீயணைப்புத் துறையின் தலைவா், அதுல் காா்க் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.