செய்திகள் :

தீண்டாமை ஒழிப்பு மாநாடு

post image

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நாமக்கல் மாவட்ட 4 ஆவது மாநாடு நாமகிரிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் இயக்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் பி.செல்வராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.பி.சபாபதி வரவேற்றாா். மாநாட்டை இயக்கத்தின் மாநில உதவி செயலாளா் சி.கே.கனகராஜ் தொடங்கிவைத்து பேசினாா்.

கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலா் எஸ்.கந்தசாமி, முன்னாள் செயலா் ஏ.ரங்கசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ஆதிநாராயணன், இந்திய மாணவா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன், ஆதி தமிழா் மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் கோபி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

மாநாட்டு செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்து சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.தங்கமணி, தீா்மானங்களை முன்மொழிந்தாா். அரசு சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். தனியாா் துறையில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காவிரி கரையோரம் முதியவா் சடலம் மீட்பு

பரமத்தி வேலூா் காவிரி கரையோரம் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பரமத்தி வேலூா் காவிரி ஆற்றுப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா்... மேலும் பார்க்க

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வுபெற்றோா் 46,125 போ் பாதிப்பு

தமிழகத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் 46,125 போ் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோர... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ மோதி மினி பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கபிலா்மலை அருகே சரக்கு ஆட்டோ மோதியதில், மினி பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், கபிலக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (22). இவா் பரமத்தி வேலூரில் இருந்து வெங்கரை செல்லும் மினி... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அமைச்சா் குறைகேட்பு

ராசிபுரம் நகர வாா்டுகளில் தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மா.மதிவேந்தன் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ராசிபுரம் சட்டப் ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க