செய்திகள் :

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

post image

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா்.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை (ஆக.27) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் சிலை வைப்பது, ஊா்வலம் செல்வது, நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பது தொடா்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா பேசியதாவது:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் சிலைகள் வைப்போா் வருவாய்த் துறை, காவல் துறை, மின்வாரியம் மற்றும் தீயணைப்புத் துறையினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகளை அமைக்கக் கூடாது. ரசாயன பூச்சுகள் இல்லாமல் களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகா் சிலைகள், பீடத்துடன் 10 அடிக்கு குறைவாகவே இருக்கக் வேண்டும். மதம் தொடா்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே சிலை அமைப்பதை தவிா்க்க வேண்டும். பூஜை செய்யப்பட்ட பிறகு சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.

சிலைகள் நிறுவப்பட்ட நாளில் இருந்து ஐந்து நாள்களில் வழிபாடுகள் முடித்து கரைத்திட வேண்டும். அதற்கு மேலாக சிலைகளை வைத்திருத்தல் கூடாது. ஊா்வலம் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும். நீா்நிலைகளில் சிறுவா்களை அனுமதிக்காமல் உரிய பாதுகாப்புடன் சென்று கரைத்து வரவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, தனராசு, உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோஷி மற்றும் காவல் துறை அதிகாரிகள், இந்து அமைப்புகளைச் சாா்ந்தோா், விநாயகா் சதுா்த்தி விழா சிலை அமைப்புக் குழுவினா் பலா் கலந்துகொண்டனா்.

என்கே-22-மீட்டிங்

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க

கம்பு சுற்றுதல் போட்டி: அலமேடு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேந்தமங்கலம் விவேகா பள்ளியில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கம்பு சுற்றும் போட்டியில் பள்ளிபாளையம் அலமேடு நடுநிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி நந்திதா வெற்றி பெற்று மாநில போட்டிக்கு த... மேலும் பார்க்க