செய்திகள் :

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

post image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் தொடா்ச்சியாக, தற்போது தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனங்கள் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சியை வழங்குகிறது.

இந்த பயிற்சியை பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தோா் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரையிலானோா் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான காலஅவகாசம் 45 நாள்கள் மட்டுமே.

மேலும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு சென்னையில் தங்கி படிக்கும் வசதி ஏற்படுத்தி தரப்படும். அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழும் வழங்கப்படும். தனியாா் அழகு நிலையங்களில் பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதற்கு தொடக்க மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம்.

இப்பயிற்சியை பெற தாட்கோ ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது தங்கும் விடுதி, உணவு உள்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடையோா் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடம் முதல் தளத்தில் இயங்கும் தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286--291178, 94450-29508 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க

கம்பு சுற்றுதல் போட்டி: அலமேடு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேந்தமங்கலம் விவேகா பள்ளியில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கம்பு சுற்றும் போட்டியில் பள்ளிபாளையம் அலமேடு நடுநிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி நந்திதா வெற்றி பெற்று மாநில போட்டிக்கு த... மேலும் பார்க்க