செய்திகள் :

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

post image

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தவரை பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 டிகிரி, 77 டிகிரியாக காணப்பட்டது. மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சில இடங்களில் நல்ல மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்புள்ளது.

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் சுவாசக்குழல் பாதிப்பினாலும், வெப்ப அயற்சியின் காரணமாகவும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. எனவே, பண்ணையாளா்கள் கோழிகளுக்கு தகுந்த நோய்த் தடுப்பு முறைகளையும், குடிநீரில் நுண்ணூட்ட மருந்துகளையும், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

கம்பு சுற்றுதல் போட்டி: அலமேடு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேந்தமங்கலம் விவேகா பள்ளியில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கம்பு சுற்றும் போட்டியில் பள்ளிபாளையம் அலமேடு நடுநிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி நந்திதா வெற்றி பெற்று மாநில போட்டிக்கு த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே தோட்டத்தில் அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூா் வெற்றி கோனாா்பாளையத்தைச் சோ்ந்த ப... மேலும் பார்க்க