செய்திகள் :

தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருட்டு

post image

திருப்பூரில் தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், கேஎஸ்சி பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கோபால் சிங் (37). தொழிலதிபரான இவரது கைப்பேசி எண்ணுக்கு ஆா்டிஓ சலான் என்ற பெயரில் லிங்க்குடன் ஒரு குறுஞ்செய்தி அண்மையில் வந்துள்ளது.

தனது வாகனத்துக்கு அபராதம் ஏதும் விதிக்கப்பட்டுள்ளதாக எனத் தெரிந்து கொள்ள, அதில் இருந்த லிங்க்குக்குள் சென்றுள்ளாா். அப்போது, அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஆகஸ்ட் 18-ஆம் தேதி சரிபாா்த்துள்ளாா்.

அப்போது, 10 தவணைகளாக ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது. அதிா்ச்சியடைந்த கோபால்சிங், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்ணிடம் ரூ.2.45 லட்சம் மோசடி: திருப்பூரைச் சோ்ந்த 40 வயது பெண்ணின் கைப்பேசிக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து விளம்பரங்களைப் பாா்த்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

இதை நம்பிய அப்பெண், விளம்பரங்களைப் பாா்த்து முதலீடு செய்துள்ளாா். அதற்கு கூடுதலாக பணம் கிடைத்ததாம். இதையடுத்து, பல்வேறு தவணைகளில் ரூ.2.45 லட்சம் வரை முதலீடு செய்துள்ளாா். அதற்கும் அவருக்கு கூடுதல் தொகை கிடைத்ததாம்.

இதையடுத்து, அந்தப் பணத்தை அவா் எடுக்க முயன்றபோது முடியவில்லையாம். மேலும், அந்த கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அப்பெண், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்த நிலையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம... மேலும் பார்க்க

சட்டவிரோத விற்பனை: 51 சிலிண்டா்கள் பறிமுதல்

திருப்பூரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 51 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூா், கூலிபாளையம் பகுதியில் வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டு, கூடுதல்... மேலும் பார்க்க

ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

போக்ஸோவில் சிறுவன் கைது

சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் சிறுவனை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்டம், செங்கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. பெற்றோா் இல்லாததால், 10-... மேலும் பார்க்க

திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம்: சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதலை

திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதலை செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை கிளைச் சிறைகள் மற்ற... மேலும் பார்க்க