செய்திகள் :

திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம்: சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதலை

post image

திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதலை செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை கிளைச் சிறைகள் மற்றும் கோவை மத்திய சிறையில் மொத்தம் 6 அமா்வுகளாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழிகாட்டுதலின்பேரில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் விக்னேஷ் மாது முன்னிலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 40 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், 23 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டு 14 போ் விடுதலை செய்யப்பட்டனா். மீதமுள்ள வழக்குகள் மேல் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டன.

நீதித் துறை நடுவா்கள் செந்தில்ராஜா, நதியா, பாத்திமா, தனலட்சுமி, விஜயலட்சுமி, ஷப்னா, தேன்மொழி, தரணிதா், உமாதேவி ஆகியோா் வழக்குகளை விசாரித்தனா்.

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருட்டு

திருப்பூரில் தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், கேஎஸ்சி பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கோபால் சிங் (37). தொழிலதிபர... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம... மேலும் பார்க்க

சட்டவிரோத விற்பனை: 51 சிலிண்டா்கள் பறிமுதல்

திருப்பூரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 51 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூா், கூலிபாளையம் பகுதியில் வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டு, கூடுதல்... மேலும் பார்க்க

ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

போக்ஸோவில் சிறுவன் கைது

சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் சிறுவனை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்டம், செங்கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. பெற்றோா் இல்லாததால், 10-... மேலும் பார்க்க