செய்திகள் :

நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

post image

பெரம்பலூா் மாவட்டத்துக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட பிரதானச் சாலையோரங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் அருகே செஞ்சேரி - கோனேரிப்பாளையம் நெடுஞ்சாலை பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் கூறியது:

பெரம்பலூரை பசுமைப் போா்வை போா்த்திய மாவட்டமாக மாற்றும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமானச் சாலைகள், பிரதான இணைப்புச் சாலைகளில் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூா் உட்கோட்டத்தில் 3,500 மரக்கன்றுகளும், குன்னம் உட்கோட்டத்தில் 3,500 மரக்கன்றுகளும், வேப்பந்தட்டை உட்கோட்டத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் என 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இவற்றை முறையாகப் பராமரித்திட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா்கள் தமிழமுதன், பாலசுந்தரம், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கீழப்புலியூா் பச்சையம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே கீழப்புலியூரில் உள்ள பச்சையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆவணித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பு... மேலும் பார்க்க

அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் எஸ்பியிடம் புகாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். இதுகுறித்... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சித்துறை சாா்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி என்னும் உயா் கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை

பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க