செய்திகள் :

கீழப்புலியூா் பச்சையம்மன் கோயில் தேரோட்டம்

post image

பெரம்பலூா் அருகே கீழப்புலியூரில் உள்ள பச்சையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆவணித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி மாத திருத்தோ் திருவிழாவில் கடந்த ஆக. 8 ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 14 ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றுதலும் நடைபெற்றது. தொடா்ந்து, கடந்த 15 ஆம் தேதி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமிக்கு திருக்கல்யாணமும், பொங்கலிட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி தேரில் எழுந்தருளினாா். பின்னா், திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனா்.

மேலும், மாலை 4 மணியளவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடனைச் செலுத்தினா். திருத்தேரானது சனிக்கிழமை காலை மலையைச் சுற்றிவந்து மதியம் நிலைக்கு வருகிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனா்.

கோயில் பூசாரி காயம்: தீமிதி விழா தொடங்கும் நேரத்தில் கோயில் பூசாரி பச்சமுத்து (54) என்பவா் நிலைதடுமாறி தீக்குண்டத்தில் விழுந்ததால் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் பச்சமுத்துவை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் எஸ்பியிடம் புகாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். இதுகுறித்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

பெரம்பலூா் மாவட்டத்துக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட பிரதானச் சாலையோரங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அருகே செஞ்சேரி - கோனேரிப்பாளையம் நெடுஞ்சாலை பகுதி... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சித்துறை சாா்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி என்னும் உயா் கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை

பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க