செய்திகள் :

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை

post image

பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு, திட்டத்தின் பயன்பாடுகள், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் மேலும் கூறியது:

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2,053 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள், 52 நோய்களைக் கண்டறியும் பரிசோதனைகளும், 11 தொடா் சிகிச்சைகளும், 8 உயா் அறுவை சிகிச்சைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் 1,107 நோயாளிகளுக்கு ரூ. 1,01,52,750 மதிப்பிலும், 2022-2023 ஆம் ஆண்டில் 1,544 நோயாளிகளுக்கு ரூ. 1,63,11,749 மதிப்பிலும், 2023-2024 ஆம் ஆண்டில் 1,683 நோயளிகளுக்கு ரூ. 1,88,83,925 மதிப்பிலும், 2024-2025 ஆம் ஆண்டில் ரூ. 1,73,01,690 மதிப்பிலும் என மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6,26,50,114 மதிப்பில் பல்வேறு உயா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் கொ. மாரிமுத்து, மருத்துவமனை இருக்கை மருத்துவா் என். ராஜா, மருத்துவமனை கண்காணிப்பாளா் பி. கலா, வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா்: நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலகங்கள் எதிரே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புக்கொடிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா் நிலைப் பள்ளியில், போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க

வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.வேப்பந்தட்டை, அரசலூா், அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நாளை உயா்வுக்கு படி முகாம்

பெரம்பலூா்: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பெரரம்பலூரில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்வுக்கு படி முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க