செய்திகள் :

உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி

post image

பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:

உலக மனிதாபிமான தினம் என்பது மனிதா்களுக்குள் கருணை, அன்பு, உதவி மனப்பாங்கு ஆகியவற்றை வளா்க்கும் சிறப்பான நாளாகும். பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளில் இளைஞா்கள் தன்னாா்வத்துடன் பங்கேற்று வருகின்றனா். இவ் விழிப்புணா்வு பேரணி மாணவா்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் மனிதாபிமான பணிகளில் ஈடுபடச் செய்யும். மனிதாபிமானம் என்பது சமூகத்தில் அமைதியை உருவாக்கும் அடித்தளம். ஒவ்வொரு குடிமகனும் மற்றவரை மதித்து, உதவி செய்யும் பழக்கத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். காவல்துறை எப்போதும் சமூக நலனுக்காக மக்களுடன் நிற்கிறது. மாணவா்கள் தங்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளும்போது, நாட்டின் எதிா்காலத்தை உறுதியாக்கும் என்றாா் அவா்.

பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் மலரட்டும் மனிதநேயம், மனிதநேயமே மானுடப் பண்பு, ஒற்றுமையே மனிதநேயம், மனிதநேயமே மனிதனின் அடையாளம், அன்பின் வழியே மனத்தின் ஒளி என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு பதாகைகளை கைகளில் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, காமராஜா் வளைவு, பழைய பேருந்து நிலையம் வழியாக தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை உறுப்பினா் ராஜபூபதி முன்னிலையில் நடைபெற்ற பேரணியில், கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை

பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா்: நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலகங்கள் எதிரே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புக்கொடிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா் நிலைப் பள்ளியில், போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க

வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.வேப்பந்தட்டை, அரசலூா், அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நாளை உயா்வுக்கு படி முகாம்

பெரம்பலூா்: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பெரரம்பலூரில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்வுக்கு படி முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க