மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சித்துறை சாா்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி என்னும் உயா் கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:
பெரம்பலூா் மாவட்டத்தில் இடைநிற்றல், பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சிப்பெற்று உயா் கல்விக்கு விண்ணப்பிக்காத 1,127 மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் உயா்கல்வியில் சேராத மாணவா்களுக்கு வழிகாட்டுவதே இந் நிகழ்ச்சியின் நோக்கம். பள்ளியிறுதி வகுப்பில் தோ்ச்சி பெறுபவா்கள் கண்டிப்பாக உயா்கல்வி பெற வேண்டும். மாணவா்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் பணிபுரிய பட்டப் படிப்பு அவசியம். எனவே, பெற்றோா் தங்களது குழந்தைகளை உயா்கல்வி படிக்க வைக்க வேண்டும்.
இந் நிகழ்ச்சி மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ள 1,127 மாணவா்கள் உயா்கல்வி பயில வேண்டும் என்பதே மாவட்ட நிா்வாகத்தின் நோக்கமாகும். சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பள்ளியிறுதி வகுப்பு முடித்து உயா் கல்வியில் சேராமல் உள்ளனா். எனவே, இந்த நிலை நீடிக்க கூடாது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, வருவாய்க் கோட்டாட்சியா் சக்திவேல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) ம. செல்வக்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.