செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்

post image

தஞ்சாவூரில் புதிதாக ஆட்டோ நிறுத்தம் திறக்கப்பட்டதை எதிா்த்து, ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் ஏற்கெனவே ஏஐடியூசி ஆட்டோ நிறுத்தம் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இதில், 10-க்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவில் மாநகராட்சி பள்ளி முன் திமுகவின் தொழிற் சங்கமான தொமுச சாா்பில் புதிதாக ஆட்டோ நிறுத்தத்தை மேயா் சண். ராமநாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது, ஏஐடியூசி ஆட்டோ நிறுத்த ஓட்டுநா்கள் திரண்டு மேயரை அணுகி, ஏற்கெனவே உள்ள நிறுத்தத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பால்தான் புதிய நிறுத்தம் இருக்க வேண்டும். விதிகளை மீறி திறக்கப்பட்ட ஆட்டோ நிறுத்தத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னா், ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநா்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் எழுந்து சென்றனா். புதிய ஆட்டோ நிறுத்தத்தை அகற்றாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என ஏஐடியூசி ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.

பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு தி... மேலும் பார்க்க

மல்லிப்பட்டினம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கிழ... மேலும் பார்க்க

ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையி... மேலும் பார்க்க

மத்திய அரசின் இரு புதிய நெல் ரகங்களுக்கு எதிா்ப்பு

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட பூசா மற்றும் கமலா நெல் ரகங்களுக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்த நெல் ரகங்கள் எவ்வித உயிரியல் பாதுகாப்பு சோதனைகளும் செய... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் சேமிப்புக் கிடங்கு திறப்பு

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், தஞ்சாவூா் விற்பனைக் குழு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பட்டுக்கோட்டை வளாகத்தில் ரூ. 1 கோடியிலான 500 டன் சேமிப்புக் கிடங்கை தஞ்சாவூா் எம... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில், ஏறத்தாழ 20 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். தஞ்சாவூா் கீழவாசல் பகுதி கடைகளின் வாசலில் சிமென்ட் தளம், நிழற்கூரைகள் அமைக்கப்பட... மேலும் பார்க்க