செய்திகள் :

பரமத்தி வேலூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

post image

பரமத்தி வேலூா் அருகே தோட்டத்தில் அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூா் வெற்றி கோனாா்பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி- லட்சுமி தம்பதியினா் மகன் அரவிந்த் மாரியப்பனுடன் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்புச்சிபாளையம் மண்டபத்து பாறையில் மணி என்பவரது தேங்காய் கிடங்கில் தங்கி வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருடன் சோ்ந்து வேலை செய்துவந்த

அரவிந்த் மாரியப்பன், வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றாா். அதன்பிறகு வீடுதிரும்பாததால் அவரை பல்வேறு இடங்களில் தேடினா்.

இந்த நிலையில், சனப்பங்காடு காலனி அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்துக்கு சென்ற அப்பகுதி விவசாயி ஒருவா் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி அருகே சிறுவன் இறந்துகிடந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

வேலூா் போலீஸாா் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க